follow the truth

follow the truth

May, 13, 2025
HomeTOP1"வேலை நிறுத்தமாயினும், அனைத்து பொது சேவைகளும் செயல்படும்"

“வேலை நிறுத்தமாயினும், அனைத்து பொது சேவைகளும் செயல்படும்”

Published on

சாதாரண செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் இதுவரையில் 300 இற்கும் மேற்பட்ட பெட்ரோல் மற்றும் டீசல் பவுசர்கள் விநியோகத்திற்கு தயாராக உள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் எம்.யூ.மொஹமட் உறுதிப்படுத்தியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேலும், லாங்.வி.எம். நிதி அதிகாரிகள் சங்கம் எந்தவொரு தொழிற்சங்க நடவடிக்கையிலும் ஈடுபடாது நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்த ஆதரவை வழங்கும். பொது மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைநிறுத்தத்திற்கு மத்தியிலும் மக்கள் வங்கியின் 352 கிளைகளில் 330 கிளைகள் முழுமையாக இயங்கி வருவதாக மக்கள் வங்கியின் பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி/பொது முகாமையாளர் கிளைவ் பொன்சேகா உறுதிப்படுத்தியுள்ளார்.

இலங்கை வங்கியின் தலைமைக் காரியாலயத்தின் அனைத்துத் திணைக்களங்கள் உட்பட 265 கிளைகளின் வங்கிச் சேவைகள் பொதுமக்களுக்கு சேவையாற்றும் வகையில் வழமை போன்று இயங்கி வருவதாக இலங்கை வங்கியின் பொது முகாமையாளர் ரசல் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

107 இ.போச. டிப்போக்களும் இன்று காலை 11.00 மணி வரையான நிலவரப் படி வழமையான கால அட்டவணையின்படி இயங்குவதாகவும் 08 தொழிற்சங்கங்களில் ஜே.வி.பி தொழிற்சங்கம் தவிர்ந்த 07 தொழிற்சங்கங்கள் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியதாகவும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்

இ.போச. இனது 8 தொழிற்சங்கங்களில் ஜே.வி.பி தொழிற்சங்கம் தவிர்ந்த ஏனைய 7 தொழிற்சங்கங்களும் அரசுடன் இணைந்து செயற்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அலதெனிய பஸ் விபத்தில் 37 பேர் வைத்தியசாலையில்

கண்டி, அலதெனிய பகுதியில் நேற்றிரவு(12) தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 37 பேர் காயமடைந்து...

வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்றும் விசேட போக்குவரத்து திட்டம்

வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் இன்றும் விசேட போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. வெசாக் அலங்காரங்களை பார்வையிடுவதற்கு பாரிய அளவிலான மக்கள்...

கெரண்டிஎல்ல பஸ் விபத்து குறித்த ஆராய விசேட பொலிஸ் குழு

ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுப்பதற்காக சிரேஷ்ட...