முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்யும் நடவடிக்கையை நாளை காலை 10 மணி வரை நிறுத்துமாறு பொலிஸாருக்கு லாகூர் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவர் ஃபவாத் சவுத்ரி தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இம்ரான் கானின் வீட்டிற்கு வௌியே இடம்பெறும் மிலேச்சத்தனமான செயற்பாடுகளை நிறுத்த வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனிடையே, இன்று பிற்பகல் வேளையில் இம்ரான் கானின் இல்லத்தின் முன் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் திரும்பி அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.