follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுஇணையத்தளம் ஊடாக ஆசன முன்பதிவு செய்யலாம்

இணையத்தளம் ஊடாக ஆசன முன்பதிவு செய்யலாம்

Published on

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளில் நீண்ட தூர பயணங்களுக்காக இணையத்தளம் மூலம் ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார்.

அத்துடன், sltb.express.lk என்ற இணையத்தளம் ஊடாகவும் 1315 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் ஊடாகவும் நெடுந்தூர பயணங்களுக்கான ஆசன முன்பதிவினை மேற்கொள்ள முடியும் என நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் நாற்பது இடங்களில் குறித்த வசதி செய்யப்பட்டுள்ளதுடன், அதற்காக 1315 என்ற தொலைபேசி இலக்கத்தினை மூன்று மொழிகளிலும் 365 நாட்கள் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், sltb.eseat.lk இணையத்தளம் மற்றும் 1315 மொபைல் போன் செயலி ஊடாகவும் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...