இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளில் நீண்ட தூர பயணங்களுக்காக இணையத்தளம் மூலம் ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார்.
அத்துடன், sltb.express.lk என்ற இணையத்தளம் ஊடாகவும் 1315 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் ஊடாகவும் நெடுந்தூர பயணங்களுக்கான ஆசன முன்பதிவினை மேற்கொள்ள முடியும் என நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் நாற்பது இடங்களில் குறித்த வசதி செய்யப்பட்டுள்ளதுடன், அதற்காக 1315 என்ற தொலைபேசி இலக்கத்தினை மூன்று மொழிகளிலும் 365 நாட்கள் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், sltb.eseat.lk இணையத்தளம் மற்றும் 1315 மொபைல் போன் செயலி ஊடாகவும் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.