follow the truth

follow the truth

May, 20, 2024
Homeஉள்நாடுஇணையத்தளம் ஊடாக ஆசன முன்பதிவு செய்யலாம்

இணையத்தளம் ஊடாக ஆசன முன்பதிவு செய்யலாம்

Published on

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேரூந்துகளில் நீண்ட தூர பயணங்களுக்காக இணையத்தளம் மூலம் ஆசன முன்பதிவுகளை மேற்கொள்ளும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கை நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார்.

அத்துடன், sltb.express.lk என்ற இணையத்தளம் ஊடாகவும் 1315 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைப்பதன் ஊடாகவும் நெடுந்தூர பயணங்களுக்கான ஆசன முன்பதிவினை மேற்கொள்ள முடியும் என நெடுஞ்சாலைகள் இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியில் நாற்பது இடங்களில் குறித்த வசதி செய்யப்பட்டுள்ளதுடன், அதற்காக 1315 என்ற தொலைபேசி இலக்கத்தினை மூன்று மொழிகளிலும் 365 நாட்கள் 24 மணி நேரமும் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், sltb.eseat.lk இணையத்தளம் மற்றும் 1315 மொபைல் போன் செயலி ஊடாகவும் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

புத்தளத்தில் அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை

சீரற்ற காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்திலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் நாளை (20) விசேட விடுமுறை வழங்கப்படவுள்ளதாக வடமேல் மாகாண...

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...