follow the truth

follow the truth

May, 16, 2025
Homeஉள்நாடு90 வீதமான மாணவர்களின் கல்வி அறிவு பாதிப்பு

90 வீதமான மாணவர்களின் கல்வி அறிவு பாதிப்பு

Published on

இலங்கையிலுள்ள அரச பாடசாலைகளில் மூன்றாம் வகுப்பு குழந்தைகளில் சுமார் 90 சதவீதம் பேர் போதிய கல்வியறிவு அல்லது அல்லது எண்களைப் பற்றிய அறிவைப் பெற முடியவில்லை என்பது தெரியவந்துள்ளது.

கொரோனா காலத்தில் பாடசாலைகள் மூடப்பட்டதால் குழந்தைகளுக்கு ஏற்பட்டுள்ளன கல்வி பாதிப்பு குறித்து கல்வி அமைச்சு அண்மையில் விசேட ஆய்வு நடத்தப்பட்டது.

அதன்படி, 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி வரையிலான காலப்பகுதியை அடிப்படையாகக் கொண்டு இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

கேட்டல், பேசுதல், படித்தல், எழுதுதல், எண்கள் மற்றும் அடிப்படை கணித அறிவு உள்ளிட்ட பல துறைகளில் இவர்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது.

இதன் போது, 90 சதவீத மாணவர்கள் போதிய கல்வியறிவு அல்லது எண்கள் பற்றிய அறிவைப் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது.

இந்த கணக்கெடுப்பிற்கு நாட்டின் ஒவ்வொரு மாகாணத்தையும் உள்ளடக்கிய ஆயிரத்து 9 பாடசாலைகளில் இருந்து 3 ஆம் வகுப்பு படிக்கும் சுமார் 10 ஆயிரம் மாணவர்கள் இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மஹிந்தானந்த அழுத்கமகேவை கைது செய்ய உத்தரவு

முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவை கைது செய்ய நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 2021 ஆம் ஆண்டு தரமற்ற உரம் இறக்குமதி...

சூரிய மின்சக்தி படலம் மூலம் 1,700 மெகாவோட் மின்சாரம் உற்பத்தி

நாடளாவிய ரீதியில் மேற்கூரைகளில் அமைக்கப்பட்ட சூரிய மின்சக்தி திறன், மே 1 ஆம் திகதி நிலவரப்படி, மெகாவோட் 1,700...

வேலைநிறுத்த போராட்டத்திற்கு தயாராகும் ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள்

ஆட்சேர்ப்பு உள்ளிட்ட சேவை பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, அடுத்த 24 மணி நேரத்திற்குள் அல்லது அதற்கு மேலதிகமாக திடீர்...