சிவனொளிபாத மலைக்கு செல்லும் வீதியில் கடைகளில் விசேட பரிசோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த கடைகளில் உணவு மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை நடத்தப்பட்டு வருவதாக இரத்தினபுரி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்தார்.
லிஸ்டீரியா நோயால் பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் உயிரிழந்தை காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் கூறினார்.