மலையக பகுதிகளில் உள்ள ஆரம்பக் கல்வி பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக அரிசி வழங்குவதற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கைச்சாத்திடப்பட்டது.
அரச சார்பற்ற நிறுவனமான ‘Good Neighbors International’ இத்திட்டத்துக்கான பங்களிப்பை வழங்குகின்றது.
இந்நிகழ்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் அமைச்சின் செயலாளர் திரு.எஸ்.சமரதிவாகர, அமைச்சின் அதிகாரிகள், புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் திருமதி.பங்கமுவ, உதவி பணிப்பாளர் பிரமோத் குணவர்தன, அரச சார்பற்ற நிறுவனத்தின் ‘Good Neighbors International’ முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.