follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுஇலங்கை வந்த அமெரிக்க இராஜதந்திரிகள் தொடர்பில் தகவல் வழங்குமாறு கம்மன்பில கோரிக்கை

இலங்கை வந்த அமெரிக்க இராஜதந்திரிகள் தொடர்பில் தகவல் வழங்குமாறு கம்மன்பில கோரிக்கை

Published on

கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி நாட்டிற்கு வருகை தந்த அமெரிக்க இராஜதந்திரிகள் குழு தொடர்பிலான தகவல்களை வழங்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.

குடிவரவு, குடியகல்வு திணைக்களம் மற்றும் விமான நிலையத்திடம் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கோரிக்கை விடுத்துள்ளார்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் கடிதம் அனுப்பியுள்ளார்.

இரண்டு C17 Globemaster விமானங்கள் மூலம் நாட்டிற்கு வந்திருந்ததுடன், அந்த தூதுக்குழுவில் அமெரிக்க FBI நிறுவனத்தின் பணிப்பாளரும் உள்ளடங்கியுள்ளாரா என்பது தொடர்பிலும் உறுதிப்படுத்துமாறு அவர் கோரியுள்ளார்.

குறித்த நபர்களை குடிவரவு குடியகல்வு மற்றும் சுங்க அதிகாரிகளின் சோதனைக்கு உட்படுத்த வேண்டாம் என இலங்கையில் உள்ள உயர்மட்ட அதிகாரிகள் எவரேனும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்களா என்ற தகவலும் கடிதத்தில் கோரப்பட்டுள்ள விடயங்களில் உள்ளடங்கியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

48 மணி நேர வேலைநிறுத்தம்

வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் 48 மணி நேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட ரயில் சாரதிகள் தீர்மானித்துள்ளனர்.

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...