முட்டைக்கு தட்டுப்பாடு?

471

தற்போது நாட்டில் முட்டை தேவையில் 30 வீதமே உற்பத்தி செய்யப்படுவதாக அகில இலங்கை கோழி வியாபார சங்கம் தெரிவித்துள்ளது.

கண்டியில் இன்று (20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் சிரேஷ்ட ஆலோசகர் மாதலி ஜயசேகர இதனை தெரிவித்தார்.

இதேவேளை, அடுத்த வாரத்தின் பின்னர் முட்டையின் விலை குறைவடையும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பெரிய அளவில் முட்டை உற்பத்தியாளர்கள் முட்டைகளை கையிருப்பில் வைத்திருப்பதால், தற்போது சந்தையில் முட்டை தட்டுப்பாடு நிலவுவதாகவும், மக்கள் முட்டை உற்பத்தியாளர்களிடம் இருந்து முட்டைகளை வாங்கி சேமித்து வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here