சர்வதேச நாணய நிதியத்திற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மத்திய வங்கியை சுயாதீனமாக்க முயற்சித்து வருவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தற்போது தேர்தல்கள் ஆணைக்குழுவையும் நீதித்துறையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 17, 19, 20 மற்றும் 21 அரசியலமைப்புத் திருத்தங்களின் மூலம் நிறுவப்பட்ட சுயாதீன ஆணைக்குழுக்களின் சுதந்திரத்தில் செல்வாக்கு செலுத்துவதன் மூலம் ஜனாதிபதி நீதித்துறையை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.