சில பகுதிகளில் 12 மணிநேர நீர்வெட்டு

740

எதிர்வரும் 25ஆம் திகதி (25) காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலான 12 மணிநேர நீர் விநியோகத்தடை அமுலாகும் என தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

பேலியகொடை, வத்தளை, ஜா–எல, கட்டுநாயக்க – சீதுவ ஆகிய நகர சபைக்குட்பட்ட பிரதேசங்கள், களனி, வத்தளை, பியகம, மகர, தொம்பே, ஜா–எல, கட்டானை, மினுவாங்கொட ஆகிய பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்கள் மற்றும் கம்பஹா பிரதேச சபை எல்லையின் சில பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சப்புகஸ்கந்தை மின்சார சபை அலுவலகத்தினால் மின்சார விநியோகம் அவசர பணிகளுக்காக தடைசெய்யப்படுவதால், இவ்வாறு நீர் விநியோகம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here