நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழுவினர் நாளை(21) காலை தென்னாபிரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் பணிகளை எவ்வாறு வெற்றிகரமாக முன்னெடுப்பது என்பது தொடர்பில் தென்னாபிரிக்காவின் அனுபவங்களைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தென்னாபிரிக்காவுக்கு செல்லவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.