ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் வட இந்தியாவில் நேற்று (21) இரவு 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த நிலநடுக்கத்தின் மையம் ஆப்கானிஸ்தானின் இந்து குஷ் மலைப்பகுதியில் 180 கி.மீ ஆழத்தில் அமைந்துள்ளதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.