follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉள்நாடுஇலங்கை பெண்களுக்கு உதவ ஜப்பான் நிதியுதவி

இலங்கை பெண்களுக்கு உதவ ஜப்பான் நிதியுதவி

Published on

இலங்கையில் சமூக பொருளாதார நெருக்கடியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்காக மனிதாபிமான உதவிகளை வழங்க 1.06 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியை ஜப்பான் வழங்கியுள்ளது.

‘நெருக்கடிக்குள்ளான பெண்களை வலுவூட்டுவோம்’ என்ற செயற்றிட்டத்தின் கீழ் ஐக்கிய நாடுகளின் பெண்கள் பிரிவினூடாக ஜப்பான் அரசு இந்த நன்கொடையை வழங்கியுள்ளது.

இந்த நிதி மூலம் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளுக்கு உள்ளான 1200-க்கும் அதிகமான பெண்களுக்கும், அவர்களின் பிள்ளைகளுக்கும் உதவிகள் வழங்கப்படவுள்ளன.

மேலும், நுண் தொழில்முயற்சியில் ஈடுபட்டு, வீழ்ச்சியை சந்தித்துள்ள 500 பெண்களுக்கும், வறுமை மற்றும் போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள 2000-ற்கும் அதிகமானோருக்கும் உதவிகள் வழங்கப்படவுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாளை பத்தரமுல்ல பகுதியில் விசேட போக்குவரத்து திட்டம்

நாளை (19) நடைபெறவுள்ள தேசிய வீரர்கள் விழாவை முன்னிட்டு, பத்தரமுல்ல பாராளுமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதியில் விசேட போக்குவரத்துத் திட்டம்...

கொழும்பில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம்

அதிக மழையினால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் நீரில் மூழ்கும் 20க்கும் அதிகமான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீரை...

இராணுவ நினைவு தின தேசிய நிகழ்ச்சி நாளை

தாய் நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்காக தங்கள் உயிரைத் தியாகம் செய்த வீரமிக்க போர்வீரர்கள் மீது இலங்கை...