பசில் – சமன்லால் குரல்பதிவு கசிந்தது

1807

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் மொரட்டுவ நகர சபையின் முன்னாள் மேயர் சமன்லால் பெர்னாண்டோவிற்கும் இடையில் காரசாரமான உரையாடல் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்குவதற்காக முன்னாள் மேயர் ஆட்களை திரட்டியதாக பசில் ராஜபக்ஷ குற்றம் சுமத்தியுள்ளார்.

அந்த நடவடிக்கையின் மூலம் பல எம்.பி.க்களின் வீடுகள் எரிக்கப்பட்டதாகவும், தற்போது கூட தனது தரப்பில் இருந்து ஏராளமானோர் நீதிமன்றத்திற்கு செல்கின்றனர் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மொரட்டுவையில் உள்ளூராட்சி மன்ற வேட்பாளர்களை நியமித்ததாக முன்னாள் மேயர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here