சிறுவர்கள், பெண்கள் மற்றும் பாலினம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் தலைவராகப் பாராளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரல தெரிவு செய்யப்பட்டார்.
இந்தக் குழு பாராளுமன்றத்தில் கூடியபோதே அவர் தெரிவு செய்யப்பட்டார்.
இந்தக் குழுவுக்கு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் கீழுள்ள நிறுவனங்கள், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி தொடர்பான தேசிய செயலகம் ஆகிய நிறுவனங்களை அழைக்க முடியும் என இதன்போது புலப்பட்டது.