உள்ளூராட்சி மன்றங்கள் குறித்து ஆராய குழு நியமனம்

376

அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதியினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

பிரதமர் தலைமையிலான குறித்த குழுவில், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர, நிதி இராஜாங்க அமைச்சர், மாகாண ஆளுநர்கள், மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்கள் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர்.

உள்ளுராட்சி மன்றங்கள் ஊடாக, மக்களுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அனைத்து பணிகளையும் எவ்வித இடையூறுமின்றி தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்குத் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கம்புர குறிப்பிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here