follow the truth

follow the truth

May, 19, 2025
Homeஉள்நாடுதரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை - வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

தரமற்ற உணவுப் பொருட்கள் விற்பனை – வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Published on

எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் அதிக விலைக்கு மற்றும் தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகார சபையின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இவ்வாறான வர்த்தகர்களை அடையாளம் காண நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான சோதனைகளை மேற்கொள்ள நுகர்வோர் அதிகார சபை விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பண்டிகை காலங்களில் கையடக்கத் தொலைபேசிகளை பயன்படுத்தி இணையம் மூலம் பொருட்களை கொள்வனவு செய்வதற்கு நுகர்வோர் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். இதுபோன்ற நேரங்களில் மக்கள் எதிர்நோக்கும் முறைகேடுகளை தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

உணவுப் பொருட்களை அதிக விலைக்கு விற்பனை செய்தல், தரமற்ற உணவுப் பொருட்களை விற்பனை செய்தல், விலை பொறிக்கப்படாமல் உணவுப் பொருட்களை விற்பனை செய்தல் உள்ளிட்ட நுகர்வோர் விவகார அதிகார சபையின் உத்தரவை மீறி செயற்படும் அனைத்து வியாபாரிகளும் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

இதேவேளை, பொருட்களை கொள்வனவு செய்யும்போது வர்த்தகர்களால் ஏதேனும் முறைகேடுகள் நடந்தால் 1977 என்ற அவசர தொலைப்பேசி இலக்கத்துக்கு அழைத்து நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு தெரிவிக்குமாறு சபையானது அனைத்து நுகர்வோரையும் கேட்டுக்கொள்கிறது என்றார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

படலந்த அறிக்கையை ஆய்வு செய்ய நான்கு பேர் கொண்ட குழு

சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க, படலந்த ஆணைக்குழு அறிக்கையை ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளார். அதன்படி, சம்பந்தப்பட்ட...

மிலான் ஜயதிலக்கவை பிணையில் விடுவிக்க உத்தரவு

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்கவை பிணையில் விடுவிக்க...

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் ‘iPhone’ சமாச்சாரம்

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தரவு அறிக்கைகள் மற்றும் இரகசியத் தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படும் அபாயம் இருப்பதாகவும், இதன் காரணமாக, புதிய...