கொழும்பு – கொட்டாஞ்சேனை ஜோர்ஜ் ஆர்.டி சில்வா மாவத்தையில் அமைந்துள்ள கழிவகற்றல் கட்டமைப்பின் பராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த போது நோய்வாய்ப்பட்ட நகர சபை ஊழியர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.
குறித்த இருவரும் மயக்கமடைந்ததை அடுத்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.
விஷவாயு உட்சென்றதால் குறித்த இருவரும் உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.