கடந்த சனி முதல் இன்று வரை கல்கிஸ்ஸையில் நீர் இல்லை

298

கடந்த சனி முதல் இன்று வரை கல்கிஸ்ஸையில் நீர்வெட்டுதெஹிவளை – கல்கிஸ்ஸ நகரசபை பகுதிக்கு கடந்த சனிக்கிழமை முதல் நீர் விநியோகம் தடைப்பட்டமையினால் பிரதேசவாசிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக கொழும்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு 10 மணிநேரம் நீர் விநியோகம் தடைப்பட்டது.

எவ்வாறாயினும், அன்று முதல் இன்று வரை தெஹிவளை பிரதேசத்திற்கான நீர் விநியோகம் எவ்வித அறிவித்தலும் இன்றி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here