காணி உரிமைப் பத்திரங்களை விரைவில் வழங்க குழு நியமனம்

314

அரசாங்கத்தினால் மக்களுக்கு வழங்கப்பட்ட காணிகளுக்காக காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் காணி உரிமைப் பத்திரங்களை வழங்கும் செயற்பாட்டைத் துரிதப்படுத்துவதற்கு அமைச்சரவை மட்டத்திலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாந்து தலைமையில் நடைபெற்ற சுற்றுலா மற்றும் காணி அமைச்சுசார் ஆலோசனைக் குழுவிலேயே இந்தக் குழு நியமிக்கப்பட்டது.

காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் பகிர்ந்தளிக்கப்பட்ட காணிகளுக்கான உரிமைப் பத்திரங்கள் பல வருடங்களாக வழங்கப்படாது இழுத்தடிக்கப்பட்டு வருவதாகப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர். இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கும் நோக்கில் அமைச்சர் இந்தக் குழுவை நியமித்தார்.

இதுவரை வழங்காதுள்ள காணி உரிமைப் பத்திரங்களை விரைவில் வழங்கி முடிப்பதற்கு ஜனாதிபதி எதிர்பார்த்திருப்பதாகவும், பூர்த்திசெய்யப்பட்டுள்ள காணி உரிமைப் பத்திரங்களை விரைவில் வழங்குவது குறித்து முடிவெடுக்க இவ்வாரம் இக்குழு கூடவிருப்பதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார்.

வடபகுதியில் உள்ள காணிப் பிரச்சினைகள் குறித்துக் கலந்துரையாடுவதற்கு வடபகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் அழைத்துக் கலந்துரையாடுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here