ஆங்கிலத்தில் தொடர்பாடல் இன்று முதல் ஆரம்பம்

389

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளிலும் ஆங்கில மொழி மூலமான தொடர்பாடல் திறனை அதிகரிக்கும் முகமாக செயற்றிட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இச் செயற்றிட்டமானது நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், கங்கோடவில சமுத்திராதேவி பாலிகா ஆரம்பப் பாடசாலையில் இன்று (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இத்திட்டத்திற்காக ஏற்கனவே 13800 ஆசிரியர்கள் பயிற்சி பெற்றுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார்

இதன் மூலம் பாடசாலைகளில் ஆங்கில மொழியை மேம்படுத்தும் நோக்கில் ஒவ்வொரு நாளும் பத்து நிமிடங்கள் ஆங்கில மொழியை செவிமடுத்தல் மற்றும் உரையாடல் மூலம் ஆங்கில மொழி அறிவினை மேம்படுத்தும் நோக்கத்தில் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here