வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவித்தல்

1031

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்யாமல், வெளிநாடுகளில் பணிபுரியும் இடங்களில் பிரச்சினைகளை எதிர்கொண்டு தூதரகங்களுக்கு வரும் பெண்களை பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைப்பதை இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்மானம் ஏப்ரல் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக வெளிநாட்டு தூதரகங்களின் தொழிலாளர் நலப் பிரிவுகளின் கீழ் பாதுகாப்பான இல்லங்கள் ஏற்படுத்தப்பட்டு, அவர்கள் வெளிநாட்டில் வேலை செய்யும் போது பல்வேறு சேவைகளைப் பெறுவதற்காக தூதரகங்களுக்கு வரும் பெண்களுக்குத் தேவையான நலன்புரி வசதிகள் மற்றும் குடியிருப்பு வசதிகள் வழங்கப்படுகின்றன. .

சட்டரீதியாக வேலைக்காக வெளிநாடு செல்லும் பெண்களுக்காக மட்டுமே அந்த தங்குமிடங்கள் நிறுவப்பட்டுள்ள போதும் ஆனால் பணியகத்தில் பதிவு செய்யாமல் வெளிநாடு சென்ற பெண்களுக்கு தேவையான அனைத்து நலன்புரி வசதிகளையும் வழங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் செயல்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here