கொழும்பு – கோட்டை போராட்டத்திற்கு நீதிமன்றின் உத்தரவு

458

கொழும்பு – கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இன்று (04) பிற்பகல் தொழிற்சங்கங்கள் நடத்தவுள்ள ஆர்ப்பாட்டம் தொடர்பில் கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதன்படி, ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதியமைச்சுக்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட குழுவினர் பிரவேசிப்பதை தடை செய்து நீதவான் திலின கமகே உரிய உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கோட்டை பொலிஸாரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை கருத்திற்கொண்டே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here