தமிழ் – சிங்கள சித்திரை புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 17ஆம் திகதி வரை விசேட புகையிரத சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விசேட ரயில் சேவைகள் வழக்கமான ரயில் சேவைகளுக்கு மேலதிகமாக சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.