களுபோவில போதனா வைத்தியசாலைக்கு பொலிஸாரால் கொண்டுவரப்படும் அடையாளம் காணப்படாத சடலங்களை இன்று (06) முதல் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என வைத்தியசாலை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
மருத்துவமனை சவக்கிடங்கின் கொள்ளளவு அதிகமாக இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், வைத்தியசாலைக்கு வெளியில் கொண்டு வரப்படும் சடலங்கள் இன்று முதல் ஏற்கப்படாது என கல்கிஸ்ஸ மற்றும் நுகேகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக களுபோவில போதனா வைத்தியசாலை தெரிவித்துள்ளது.