களனிதிஸ்ஸ தனியார் நிறுவனத்திடமுள்ள மின் பிறப்பாக்கியை கொள்வனவு செய்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
163 மெகாவோட் மின்னுற்பத்தி செய்யக்கூடிய குறித்த மின்நிலையம் தனியார் நிறுவனத்தினால் நடத்தப்பட்டு வந்தநிலையில், கடந்த 28ஆம் திகதி மீண்டும் இலங்கை மின்சார சபையினால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.
மின்சார கொள்வனவிற்கான இணக்கப்பாட்டிற்கு அமைவாக, நிபந்தனைகளுக்கு உட்பட்டு, கடந்த 2022 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட கலந்துரையாடலுக்கு அமைவாக, இந்த மின்பிறப்பாக்கி கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.