follow the truth

follow the truth

August, 24, 2025
Homeஉள்நாடுமாணவர்கள் சென்ற ஜீப் விபத்து - ஒருவர் உயிரிழப்பு

மாணவர்கள் சென்ற ஜீப் விபத்து – ஒருவர் உயிரிழப்பு

Published on

மாத்தளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொடகமுவ வெல்யாய பகுதியில் இன்று (08) ஜீப் வண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதன்போது காயமடைந்த சாரதி உள்ளிட்ட 9 பேர் மாத்தளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் 19 வயதுடைய தொடகமுவ தோட்டம், பலாபத்வல பிரதேசத்தைச் சேர்ந்தவராவார்.

மாத்தளை பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 2022 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர பரீட்சைக்கு தோன்றிய மாணவர்கள் சிலர் ஹோட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விருந்து உபசார நிகழ்வொன்றில் கலந்து கொண்டு மீண்டும் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...