நிர்வாக தெரிவில் கைகலப்பு – ஒருவர் பலி

2703

சம்மாந்துறையில் நிர்வாக தெரிவில் ஏற்பட்ட கைகலப்பு காரணமாக நேற்று(7) ஒருவர் உயிரிழந்துள்ளார்.

65 வயதான மலையடி கிராமம் 4 கிராம சேவையாளர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

நிர்வாக காலம் முடிந்த நிலையில் கூட்டத்தில் பங்குபற்றிய ஒரு சிலர் பெருநாள் முடிந்தவுடன் நிர்வாகத்தை தெரிவு செய்யுமாறும், மற்றைய குழுவினர் ஓரிரு தினங்களுக்குள் தெரிவு செய்ய வேண்டுமென வலியுறுத்தியதன் காரணமாகவும் எதிர்வரும் ஞாயற்றுக்கிழமை தெரிவு செய்ய முடிவு செய்து கலைந்து வெளியே வரும் போதே இம்மோதல் இடம் பெற்றதாக சம்பவம் குறித்து தெரியவருகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணையை சம்மாந்துறை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் சந்தேகநபர்களாக நால்வர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here