துபாய் நோக்கி பயணித்த விமானம் மீண்டும் கட்டுநாயக்கவிற்கு

2057

துபாய் நோக்கி புறப்பட்ட விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டமை காரணமாக மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை தரையிறக்கப்பட்டது.

சுமார் 15 மணித்தியாலங்கள் தாமதமாக துபாய் நோக்கி புறப்பட்ட ஶ்ரீலங்கன் விமானமொன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று காலை தரையிறக்கப்பட்டது.

நேற்று (07) மாலை 06.25 மணிக்கு குறித்த விமானம் துபாய் நோக்கி பயணிக்கவிருந்தது. எவ்வாறாயினும், குறித்த விமானம் இன்று காலை 09.30 மணிக்கே பயணத்தை ஆரம்பித்தது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு 1 மணித்தியாலம் 10 நிமிடத்தின் பின்னர், குறித்த விமானம் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

விமானிக்கு முன்பாகவுள்ள கண்ணாடியில் ( windshield ) விரிசல் ஏற்பட்டமையால் விமானம் தரையிறக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here