உண்மையான வளமான மற்றும் ஒளிமயமான எதிர்காலத்திற்காக உறுதியுடன் அணிதிரள்வதற்கான பலத்தை நாட்டின் முழுப் பிரஜைகளுக்கும் கிடைக்கப் பெற வேண்டுமென நான் வாழ்த்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சிங்கள இந்து புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தன்னிறைவு பெற்ற பொருளாதாரத்தை கொண்டிருந்த நாடு, தற்போது கண்ணீர் சொர்க்கமாக மாறியுள்ளதாகவும், குடும்பத்துடன் நிம்மதியாகவும், புத்தாண்டைக் கொண்டாடும் வாய்ப்பு கூட பல ஆண்டுகளாக இல்லாமல் போய்விட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிடுகிறார்.
பல சவால்களுக்கு மத்தியில் இலங்கை மக்கள் புத்தாண்டைக் கொண்டாடிய போதும், நாடும் மக்களும் சுபீட்சம் மற்றும் ஆரோக்கியம் பெற வாழ்த்துவதே ஒட்டுமொத்த மக்களின் ஒரே நம்பிக்கை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் குறிப்பிட்டார்.