follow the truth

follow the truth

May, 23, 2024
Homeஉள்நாடுவெப்பமான காலநிலை தொடரும்

வெப்பமான காலநிலை தொடரும்

Published on

நாட்டில் நிலவும் கடும் வெப்பமான காலநிலை தொடரும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார், மொனராகலை, குருநாகல், மற்றும் ஹம்பாந்தோட்டையிலும் சில இடங்களில் மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை’ மட்டத்திற்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னர் உள்ளடக்கப்பட்ட கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இதன் தாக்கம் சிறிதளவு குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், பொதுமக்கள் முடிந்தவரை அடிக்கடி நிழலில் ஓய்வு எடுக்குமாறு வளமண்டலவியல் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது.

அத்துடன், தேவையற்ற வெளிப்புற நடவடிக்கைகளை கட்டுப்படுத்துமாறும், இலகுவான மற்றும் வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணியுமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

கொரிய மொழிப் புலமை பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு

உற்பத்தி மற்றும் மீன்பிடி துறைகளுக்காக நடைபெற்ற கொரிய மொழிப் புலமை பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. இதில் 3,422 விண்ணப்பதாரர்கள் சித்தியடைந்துள்ளதாக...

மீன் விலை அதிகரிக்கலாம்

அடுத்த மாதமளவில் மீன்களின் விலை வேகமாக அதிகரிக்கும் என பேலியகொட மத்திய மீன் வர்த்தக வளாகத்தின் வர்த்தக சங்கம்...

மின்வெட்டு தொடர்பில் அறிவிக்க புதிய முறை

சீரற்ற காலநிலை காரணமாக நாடளாவிய ரீதியில் ஏற்படும் திடீர் மின்விநியோகத் தடை தொடர்பில் அறிவிக்க புதிய முறைமையை இலங்கை...