follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுசமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் - இலங்கை பொலிஸ் கோபா குழுவிற்கு அழைப்பு

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் – இலங்கை பொலிஸ் கோபா குழுவிற்கு அழைப்பு

Published on

சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் இலங்கைப் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றை அடுத்த பாராளுமன்ற அமர்வு வாரத்தில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் (கோபா குழு) முன்னிலையில் அழைத்திருப்பதாக அக்குழுவின் தலைவர் இராஜாங்க அமைச்சர் கௌரவ லசந்த அழகியவண்ண தெரிவித்தார்.

இதற்கமைய எதிர்வரும் 25ஆம் திகதி சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருப்பதுடன், கடந்த காலங்களில் இத்திணைக்களம் குறித்த கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், கணக்காய்வாளரின் அறிக்கை மற்றும் செயலாற்றுகை அறிக்கை ஆகியவற்றை ஆராயும் நோக்கில் பொலிஸ் திணைக்களம் எதிர்வரும் 26ஆம் திகதி அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டிருப்பதாக அதன் தலைவர் தெரிவித்தார்

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உற்பத்தித்திறன் மேம்பாட்டுக்கான சர்வதேச பயிற்சி நிகழ்ச்சித் திட்டம்

ஆசிய உற்பத்தித்திறன் அமைப்பின் (APO) ஆதரவுடன் தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உற்பத்தித்திறன் நிபுணர்களின் மேம்பாட்டுக்கான சர்வதேச...

தொழிலுக்காக இஸ்ரேலுக்கு இலங்கையர்களை அனுப்புவது இடைநிறுத்தம்

இஸ்ரேலுக்கு வேலைவாய்ப்புக்காக இலங்கையர்களை அனுப்புவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண்...

2028 ஆம் ஆண்டாகும்போது, சொந்த முயற்சியின் மூலம் கடனை திருப்பிச் செலுத்தக்கூடிய பொருளாதார வளர்ச்சியும், ஸ்திரத்தன்மையும் நாட்டில் உருவாக்கப்படும்

2028 ஆம் ஆண்டளவில் நாம் செலுத்த வேண்டிய வெளிநாட்டுக் கடன்களை சொந்த முயற்சியின் மூலம் செலுத்தக் கூடிய பொருளாதார...