இந்தியாவில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர் ஒருவர் போதைக்காக பயன்படுத்தப்படும் பெருந்தொகையான மாத்திரைகளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் உப பிரிவினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று (18) இந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய வருகை முனையத்தில் கைது செய்யப்பட்ட நபரின் பயணப்பொதிகளை சோதனை செய்ததில், 34 கிலோகிராம் மொத்த எடையுள்ள 60,460 போதைக்காக பயன்படுத்தப்படும் மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.