சீனா தலைநகர் பெய்ஜிங் நகரில் வைத்தியசாலையொன்றில் ஏற்பட்ட தீயினால் குறைந்தபட்சம் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
தீ பரவியதையடுத்து, வைத்தியசாலையிலிருந்து 71 பேர் வெளியேற்றப்பட்டனர்
இன்று புதன்கிழமை காலை வரை 21 பேர் உயிரிழந்துள்ளனர் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த திடீர் விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், அது தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.