follow the truth

follow the truth

May, 9, 2025
HomeTOP1கட்சித் தலைவர்கள் இடையே திடீர் சந்திப்பு

கட்சித் தலைவர்கள் இடையே திடீர் சந்திப்பு

Published on

நாடாளுமன்றத்தின் எதிர்கால விவகாரங்கள் குறித்து தீர்மானிக்க நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (20) கூடவுள்ளது.

பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அக்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சிங்கள தமிழ் புத்தாண்டின் பின்னர் பாராளுமன்றம் முதன்முறையாக ஏப்ரல் 25 ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக இன்று நடைபெறும் நாடாளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் இறுதி முடிவு எடுக்க உள்ளனர்.

இதேவேளை, பாராளுமன்ற தெரிவுக்குழு இன்று காலை 10.00 மணிக்கு கூடவுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இறைச்சி விற்பனை நிலையங்கள் 3 நாட்களுக்கு பூட்டு

வெசாக் தினத்தை முன்னிட்டு எதிர்வரும் 12, 13, மற்றும் 14 ஆகிய மூன்று தினங்களுக்கு இறைச்சி விற்பனை நிலையங்கள்...

டேன் பிரியசாத் கொலை வழக்கு – சந்தேக நபர்கள் அடையாளம்

டேன் பிரியசாத் கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த இரண்டு சந்தேக நபர்கள், இன்று (09)...

பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பம் கோரல்

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்களை இன்று (9) முதல் சமர்ப்பிக்கலாம் என பல்கலைக்கழக மானியங்கள்...