follow the truth

follow the truth

July, 12, 2025
HomeTOP1உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதை கல்வி அமைச்சர் ஒப்புக் கொண்டார்

உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதை கல்வி அமைச்சர் ஒப்புக் கொண்டார்

Published on

சப்ளையர்களுக்கு பணம் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங்களிலும் பாடசாலை மாணவர்களுக்கான உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த இன்று (26) பாராளுமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

இந்த ஆண்டு பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான உணவு வழங்குனர்களுக்கு உலக வங்கி நிதி 87 கோடி ரூபாயை செலுத்த நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

நிலையியற் கட்டளைகள் 27(2)இன் கீழ் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் அநுர குமார திஸாநாயக்க கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கலாநிதி சுசில் பிரேமஜயந்த மேலும் குறிப்பிட்டார்.

“.. சில மாகாணங்களில் பாடசாலை உணவு தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. குறிப்பாக தென் மாகாணத்தில் பெப்ரவரி மாதம் முதல் உணவு வழங்குனர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.

போசாக்கு திட்டத்திற்காக மாகாண சபைகளுக்கு பதினாறாயிரம் மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது. பெப்ரவரியில் 61 மில்லியன் செலுத்தப்பட்டுள்ளது. 2021 அனைத்து நிலுவைத் தொகையையும் நிறைவு செய்துவிட்டது.

ஒன்பது மாகாணங்களுக்கும் பெப்ரவரி மார்ச் மாதம் 875 மில்லியன் ரூபா பணத் தேவை. எதிர்காலத்தில் உலக வங்கி நிதியில் இருந்து தொகை வழங்கப்படும். எனவே, உணவு வழங்கும் திட்டம் நிறுத்தப்படாது. அது நீண்டு கொண்டே செல்கிறது…”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...