சூடான் குடியரசில் சிக்கித் தவிக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது இலங்கை அரசாங்கத்தின் முதன்மையான அக்கறையாகும்.
சூடானில் உருவாகி வரும் பாதுகாப்பு நிலைமையை இலங்கை தொடர்ந்தும் கண்காணித்து வருவதுடன், சிக்கித் தவிக்கும் இலங்கையர்களை வெளியேற்றுவதற்காக இந்திய மற்றும் சவுதி அரேபிய அரசாங்கங்கள் உட்பட அதன் சர்வதேசப் பங்காளிகளுடன் நெருக்கமாகப் பணியாற்றி வருகின்றது.
இது தொடர்பில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.