ராஜிதவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

319

மட்டக்ககுளி, மோதரை மீன்பிடி துறைமுகத்தை தனியார் நிறுவனத்துக்கு குறைந்த விலைக்கு குத்தகைக்கு வழங்கியதன் மூலம் அரசாங்கத்துக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள முன்னாள் மீன்பிடி வளத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன உள்ளிட்ட மூவருக்கு எதிராக திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை இன்று (26) கொழும்பு மேல் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த வழக்கை ஜூன் 16ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here