RM Parks-Shell எரிபொருள் செயற்பாடுகள் ஜூனில் ஆரம்பிக்க தீர்மானம்

288

அமெரிக்காவின் RM Parks-Shell நிறுவனத்துடன் இலங்கையில் எரிபொருள் நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து தீர்மானமொன்று எட்டப்பட்டதாக அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் RM Parks-Shell நிறுவனத்துடன் இணைய வழியில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

அதன்படி, மே மாத நடுப்பகுதியில் ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கும், ஜூன் முதலாவது வாரத்தில் செயல்பாடுகளைத் ஆரம்பிப்பதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை, கடந்த வாரம் இலங்கை பெற்றோலிய சேமிப்பு முனையத்துக்கு விஜயம் செய்த RM Parks-Shell தொழில்நுட்ப அதிகாரிகள், சர்வதேச தரம் மற்றும் பாதுகாப்புத் தேவைகளுக்கு ஏற்ப முனையத்தின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் முன்வந்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சனா விஜேசேகர மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here