follow the truth

follow the truth

June, 18, 2025
Homeஉள்நாடுகொரியாவில் இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்புகள் அதிகரிப்பு

கொரியாவில் இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்புகள் அதிகரிப்பு

Published on

கொரியாவில் இலங்கையர்களுக்கான தொழில் வாய்ப்பிற்கான எண்ணிக்கையை 8,000 ஆக அதிகரிக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவிற்கும் கொரிய மனித வள திணைக்களத்தின் பிரதானிகளுக்கும் இடையில் இன்று (26) சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போது, கொரிய மொழி ஆற்றலுடன் தயாரிப்பு பிரிவில் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்துள்ள 600 பேரை, கப்பல் கட்டுமானத்துறையில் தொழிலில் ஈடுபடுத்துவதற்கு இதன்போது உடன்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைவாக, தயாரிப்புத் துறைகளில் தொழில்வாய்ப்பை எதிர்பார்த்து, இணையத்தளத்தில் பதிவை மேற்கொண்டுள்ளவர்கள் எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்கு முன்னதாக கப்பல் கட்டுமானத்துறையில் தொழில் வாய்ப்பிற்கு தங்களை மாற்றிக்கொள்ள முடியும்.

குறிப்பிட்ட இணையத்தள பதிவு டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகிவிடும் என்பதனால், அதற்கு முன்னர் கப்பல் கட்டுமானத் தொழில் துறையில் வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தம்

பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருள் வழங்குவது உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. பீப்பாய்கள் மற்றும் கேன்களில் எரிபொருளைப்...

கெஹெலிய ரம்புக்வெல்ல இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இன்று (18) காலை வாக்குமூலம் அளிப்பதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு...

ஈரான் – இஸ்ரேல் உக்கிர மோதல் : மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

மத்திய கிழக்கில் போர் சூழல் நிலவும் நிலையில், ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் அதிகரித்து வரும் நிலையில் மசகு...