follow the truth

follow the truth

May, 11, 2025
Homeஉள்நாடுஉணவு ஒவ்வாமையால் 27 மாணவர்கள் வைத்தியசாலையில்

உணவு ஒவ்வாமையால் 27 மாணவர்கள் வைத்தியசாலையில்

Published on

நுவரெலியா – நானுஓயா கிளாசோ பிரதேச ஆரம்பப் பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 27 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் தொடர்ந்து பகலுணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று வழங்கப்பட்ட உணவை அருந்திய வேளை மாணவர்களுக்கு மயக்கநிலை, வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டன.

மேலும் குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும், உணவு விஷம் காரணமாக வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவின் சில மாதிரிகள் மற்றும் சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களின் சில மாதிரிகள் எடுக்கப்பட்டு, உணவு மாதிரிகளை கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனுராதபுரம் உணவு தரக் கட்டுப்பாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஜனாதிபதியின் இரங்கல்

கொத்மலை ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இன்று (11) அதிகாலை நடந்த பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்து,...

பேருந்து விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு இழப்பீடு

கொத்மலை ரம்பொடை - கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய,...

கெரண்டிஎல்ல போன்ற விபத்துக்களை குறைக்க வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டு வருகிறது – பிரதி அமைச்சர்

நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில், கொத்மலை, ரம்பொட – கெரண்டிஎல்ல பகுதியில் இலங்கை போக்குவரத்து சபை பேருந்து...