follow the truth

follow the truth

August, 3, 2025
Homeஉள்நாடுஉணவு ஒவ்வாமையால் 27 மாணவர்கள் வைத்தியசாலையில்

உணவு ஒவ்வாமையால் 27 மாணவர்கள் வைத்தியசாலையில்

Published on

நுவரெலியா – நானுஓயா கிளாசோ பிரதேச ஆரம்பப் பாடசாலையில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 27 மாணவர்கள் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த பாடசாலையில் தொடர்ந்து பகலுணவு வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று வழங்கப்பட்ட உணவை அருந்திய வேளை மாணவர்களுக்கு மயக்கநிலை, வயிற்று வலி, குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டன.

மேலும் குழந்தைகளின் நிலை கவலைக்கிடமாக இல்லை எனவும், உணவு விஷம் காரணமாக வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட உணவின் சில மாதிரிகள் மற்றும் சமையலில் பயன்படுத்தப்படும் பொருட்களின் சில மாதிரிகள் எடுக்கப்பட்டு, உணவு மாதிரிகளை கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அனுராதபுரம் உணவு தரக் கட்டுப்பாட்டுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதிகளின் சிறப்புரிமை குறைப்பு – அரசின் வர்த்தமானி அதிரடி

முன்னாள் ஜனாதிபதிகள், அவர்களது குடும்பங்கள் மற்றும் ஓய்வுபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட சிறப்பு சலுகைகளைக் குறைக்கும் 1986 ஆம்...

நுரையீரல் புற்றுநோய் – ஆண்கள் பெண்களை விட அதிக ஆபத்தில்

பெண்களுடன் ஒப்பிடும்போது ஆண்களுக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படும் அபாயம் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாக உள்ளதாக விசேட அறுவை சிகிச்சை...

நிலவரைபடமும் நொடியில் – நாளையிலிருந்து புதிய சேவை செயல்பாட்டில்

நாளை(01) முதல் இணையதளத்தில் பணம் செலுத்துவதன் மூலம்,நில வரைபடங்களை வீட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியும் என, நில அளவையாளர் நாயகம்...