follow the truth

follow the truth

July, 13, 2025
HomeTOP1புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் குறித்து மக்களிடம் கருத்துக் கோரல்

புதிய பயங்கரவாத தடுப்புச் சட்டம் குறித்து மக்களிடம் கருத்துக் கோரல்

Published on

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் பெற்றுக்கொள்ள நீதி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் உட்பட எந்தவொரு நபருக்கும் அதற்கான வாய்ப்பு இருப்பதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

மே மாதம் 30 ஆம் திகதி வரை அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் தமது முன்மொழிவுகளை நீதியமைச்சகத்திடம் சமர்ப்பிக்க முடியும்.

அந்த முன்மொழிவுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டு புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் குறித்து தீர்மானிக்கப்படும் எனவும் அதற்கு முன்னர் பல சுற்று கலந்துரையாடல்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டமூலம் அண்மையில் அரசாங்கத்தினால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டதுடன் சில தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.

இதன்படி, குறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதை தற்காலிகமாக நிறுத்த நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஏற்றுமதிக் கைத்தொழிலாளர் பிரிவுகளுடனும் ஜனாதிபதி தொடர் கலந்துரையாடல்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகளின் விளைவாக, விதிக்கப்பட்டிருந்த தீர்வை வரி விகிதத்தை 44% இலிருந்து 30% ஆகக் குறைக்க முடிந்துள்ளதாகவும், அந்த...

அமெரிக்க தூதராக எரிக் மேயர்- இலங்கையுடன் உறவுகளை பலப்படுத்த புதிய முயற்சி

கலிபோர்னியாவைச் சேர்ந்த எரிக் மேயர், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசுக்கான அமெரிக்காவின் அடுத்த அதிவிசேட மற்றும் முழு அதிகாரம்...

சரும நோய்களைத் தூண்டும் வெண்மை கிரீம்கள் – மருத்துவர்கள் எச்சரிக்கை

சருமத்தை வெண்மையாக்கும் கிரீம்கள் பயன்படுத்துவதால் சரும நோய்களுக்குள்ளாகும் மக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் நச்சு தொடர்பான...