சேர்பிய தலைநகரில் பாடசாலையொன்றில் இடம்பெற்ற துப்பாக்கிபிரயோகத்தில் பாதுகாவலர் ஒருவரும் எட்டு மாணவர்களையும் கொல்லப்பட்டுள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள்தெரிவித்துள்ளன.
சந்தேகநபர் 14 வயதுடைய ஏழாம் தர மாணவர் ஆவார். இந்த சம்பவத்தில் ஐந்து மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
துப்பாக்கிசூட்டு சம்பவம் இடம்பெற்ற பகுதியை நோக்கி பொலிஸ் பிரிவினர் அனுப்பப்பட்டனர் உடனடியாக குறித்த சிறுவனை கைதுசெய்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.