தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையானது திறைசேரியை சார்ந்து இயங்கும் நிறுவனமாக மாறாது என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பிரகாரம், எதிர்வரும் இரண்டு வருடங்களுக்குள் அதிகார சபையை இலாபகரமான நிறுவனமாக மாற்றுவதற்கான திட்டங்கள் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ளன.
2019-2020 ஐந்தாண்டு புலமைப்பரிசில் பரீட்சை, க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தரம் பல்கலைக்கழகத்திற்கு சித்தியடைந்து, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையில் பணிபுரியும் ஊழியர்களின் மகள்கள் மற்றும் மகன்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்ட போது தலைவர் இதனைக் குறிப்பிட்டார்.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்களின் பிள்ளைகளின் கல்விக்கு ஊக்கமளிக்கும் நோக்கில் இத்திட்டம் 2012 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
5 ஆம் அண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைக்கு மாதம் 300 ரூபா வீதம் ஒரு குழந்தைக்கு 05 வருடங்களுக்கு 18,000 ரூபா புலமைப்பரிசில், G.C.E சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைக்கு 500 ரூபா புலமைப்பரிசில் இரண்டு வருடங்கள் வரை ரூபா 12,000 மற்றும் G.C. E சித்தியடைந்த பல்கலைக்கழக அனுமதிக்கான மாணவருக்கு மாதம் 1,000 ரூபா வீதம் 4 வருடங்களுக்கு ரூபா 48,000 உம் வழங்கப்பட்டன.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிடமிருந்து 23 மில்லியன் ரூபாவை வங்கியில் நிலையான வைப்புத் தொகையைப் பேணுவதும், அதிலிருந்து பெறப்படும் வட்டித் தொகையும் இதற்காகப் பயன்படுத்தப்படும் என்று தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரி சபையின் பொது முகாமையாளர் கே. ஏ. ஜானக குறிப்பிட்டார்.
2021 தேர்வுகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்பட்டுள்ளன. பரீட்சையில் சித்தியடைந்த தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அனைத்து ஊழியர்களின் பிள்ளைகளும் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியும்.
நாட்டின் முக்கியமான அரச நிறுவனங்களுக்கிடையில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையை கொண்டு வருவதே தமது நோக்கமாகும் என தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியஆராச்சி தெரிவித்தார்.