வெசாக் பண்டிகையை முன்னிட்டு விசேட புகையிரதங்களை சேவையில் இணைக்க புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன்படி, நாளை (05) மற்றும் 07 ஆம் திகதிகளில் கொழும்பு கோட்டை – பதுளை மற்றும் பெலியத்த – அனுராதபுரம் இடையில் நான்கு விசேட புகையிரதங்களை இயக்குவதற்கு புகையிரத திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அதன்படி நாளை (5) காலை 06:30 மணிக்கு கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை வரையிலும், காலை 7:30 மணிக்கும் பெலியத்தையிலிருந்து அனுராதபுரத்திற்கு இரண்டு புகையிரதங்களும் இயக்கப்படுகின்றன.
விசேட புகையிரதம் பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை வரை மீண்டும் 7ஆம் திகதி காலை 7 மணிக்கும் அன்றைய தினம் மதியம் 12.30 மணிக்கு அனுராதபுரத்தில் இருந்து பெலியஅத்த வரையிலும் சேவையில் ஈடுபடவுள்ளதாக திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.