டெக்ஸாஸின் டலஸில் உள்ளவணிக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் 8 பேர் கொல்லப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
நபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன எனவும் தாக்குதலை மேற்கொண்டவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
துப்பாக்கி பிரயோகத்தை தொடர்ந்து அலெனில் உள்ள வணிகவளாகத்திலிருந்து நூற்றுக்கும்மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் உட்பட ஏழுபேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர் மேலும் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.