follow the truth

follow the truth

July, 8, 2025
Homeஉள்நாடுஅரசாங்கம் திருட்டு மற்றும் ஊழல்களை மறைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை

அரசாங்கம் திருட்டு மற்றும் ஊழல்களை மறைக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை

Published on

அரசாங்கம் எந்த வேளையிலும் திருட்டு மற்றும் ஊழல்களை மறைப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளார்.

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் குறித்து இன்னும் துல்லியமாக ஆராய பாராளுமன்ற தேர்வுக் குழு நியமிக்கப்பட்டதாக அமைச்சர் பிரசன்னா ரணதுங்க தெரிவித்துள்ளார்

குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிரி ஜெயசேகர இன்று (10) அளித்த அறிக்கைக்கு அமைச்சர் பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

நான் அமைச்சரவை அமைச்சராக இருந்தாலும் இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்னாண்டோவின் கீழ் தான் இது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக மூன்று அல்லது நான்கு அமைச்சரவை பத்திரங்களை முன்வைத்துள்ளோம். எனக்கு முன்னர் பணியாற்றிய அமைச்சர்களான அலி சப்ரி மற்றும் விஜயதாச ராஜபக்ஷ ஆகியோர் இது தொடர்பில் அமைச்சரவையில் விரிவாக கலந்துரையாடியுள்ளனர். அதன்படி, சிங்கப்பூர் நிறுவனம் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. நாங்கள் நீதித்துறை மற்றும் சட்ட வல்லுநர்கள் அல்ல. சட்டமா அதிபர் திணைக்களம் அதனைக் கையாள முடியும். அத்துடன், இந்த விடயம் தொடர்பில் ஆராய்வதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்தோம். அதனால்தான் இரண்டு நாட்கள் இதைப் பற்றி விவாதிக்க ஒப்புக்கொண்டோம். அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் ஒருபோதும் திருட்டையோ ஊழல்களையோ மூடி மறைக்க முயற்சிக்க மாட்டோம்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மத்திய கலாசார நிதியத்தின் நடவடிக்கைகளை பரிசீலிக்க மூவரடங்கிய குழு நியமனம்

2017 தொடக்கம் 2020 வரையிலான காலப்பகுதியில் வணக்கஸ்த்தலங்கள் மற்றும் பல நடவடிக்கைகளுக்காக மத்திய கலாச்சார நிதியத்தின் மூலம் நிதியுதவிகள்...

உத்தேச கல்வி சீர்திருத்தங்களை யதார்த்தமாக்குவதற்கு நிறுவனக் கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும்

உத்தேச கல்விச் சீர்திருத்தங்களை வெற்றிகரமாக செயற்படுத்துவதற்கு, முழு கல்வி முறையின் வசதிகளையும் மேம்படுத்தும் அதே வேளையில், நிறுவனக் கட்டமைப்பையும்...

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 7,500 ரூபா கொடுப்பனவு

அறநெறிப் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் சேவையை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதனை ஊக்குவித்தல் மற்றும் அவர்களது தனித்துவ அடையாளத்தை பாதுகாப்பதுடன்,...