follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுதெஹிவளை கொலையுடன் தொடர்புடைய 14 பேருக்கும் விளக்கமறியல்

தெஹிவளை கொலையுடன் தொடர்புடைய 14 பேருக்கும் விளக்கமறியல்

Published on

தெஹிவளை பகுதியில் நபரொருவர் கொலை செய்யப்பட்டு மற்றுமொருவரை படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 14 பேரும் மீண்டும் எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேகநபர்களை கல்கிசை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளை, வைத்தியசாலை வீதிப் பகுதியில், இருவரை தாக்கி ஒருவரைக் கொலை செய்து, மற்றும் ஒருவரை படுகாயப்படுத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் குறித்த 14 பேரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கல்கிஸ்ஸ படோவிட பிரதேசத்தை சேர்ந்த தில்ஷான் ரங்க குமார என்ற 27 வயதுடைய நபரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு ஜனாதிபதி தலைமையில் கூடியது

பாதுகாப்பு அலுவல்கள் அமைச்சுசார் ஆலோசனைக் குழு பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (17)...

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...