ஒரு வாரத்திற்கு வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக எச்சரிக்கை

341

தமது கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், ஒரு வார காலத்திற்கு சேவையில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக நிலைய அதிபர்கள் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அமைச்சருடனான கலந்துரையாடலின் போது தமது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் ஒரு வாரகால வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக இலங்கை புகையிரத நிலைய அதிபர்கள் சங்கத்தின் தலைவர் சுமேதா சோமரத்ன தெரிவித்துள்ளார்.

ரயில் நிலைய அதிபர்கள் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அடையாள வேலைநிறுத்தம் நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதாகவும் அது வெற்றியடைந்துள்ளதாகவும் சுமேதா சோமரத்ன தெரிவித்தார்.

தீர்வு கிடைக்கவில்லை என்றால் எந்தவொரு நேரத்திலும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு செல்ல நாம் தயாராக இருக்கிறோம். ”

ரயில்வே திணைக்களத்தின் பிரதிப் பொது முகாமையாளர் ஒருவருக்கு எதிராக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் ஆரம்பித்த அடையாள வேலை நிறுத்தம் நேற்று (10) நள்ளிரவுடன் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here